காணாமல் போன 100 சவரன் நகை – திருடன் யார் என்று தெரிந்ததும் சாவித்ரி செய்த செயல்.

0
429
savitri
- Advertisement -

100 சவரன் நகை திருடியது யார் என்றும் தெரிந்தும் நடிகை சாவித்திரி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான புகழ்பெற்ற, பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் சாவித்திரி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கி இருந்தார். இவர் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர். மேலும், இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் மீண்டும் நம்மை பழைய நினைவுக்கு கொண்டு சென்றது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் தேசிய விருதும் கிடைத்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

சாவித்திரி திரைப்பயணம்:

சாவித்திரியின் நடிப்பையும், குணங்களையும் உணர்ந்த கவிஞர் கண்ணதாசன் அவருடைய சிந்தனையில் இவருக்காக பாடல் வரிகள் கூட எழுதி இருந்தார். ‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ, பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா’ என்ற பாடலை பாடியிருந்தார். இப்படி சினிமா வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்த இவர் பொது வாழ்க்கையில் நல்லது கெட்டது எது பண்ணி இருந்தாலும் அதை வைத்து அவரை களங்கம் கற்பித்து விட முடியாது. பாலினும் வெண்மை, பனியிலும் மென்மை போன்றவர் சாவித்திரி.

சாவித்திரி குறித்த தகவல்:

இவர் அழகு பதுமையை போன்றவர். மேலும், சினிமா உலகில் இவருடைய நடிப்பு திறமைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது. இதனால் சாவித்திரி அளவுக்கு சரோஜாதேவியால் போட்டியிட முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் சாவித்திரியின் நடிப்பு திறமையை சரோஜாதேவியால் நெருங்க முடிந்ததில்லை. மேலும், நடிகர் திலகம் ஒரு முறை நடிகையர் திலகம் குறித்து பெருமையாக பேசி இருந்தார். பின் வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி கொண்டிருக்கும் நிலையிலும் கூட தன் ரசிகர் ஒருவரின் அவசர தேவைக்காக தான் பெற்ற ஷீல்ட்களை எல்லாம் சேர்த்து கடையில் 10,000 ரூபாய்க்கு விற்று தந்தார்.

-விளம்பரம்-

சாவித்திரி குணம்:

அந்த அளவிற்கு தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யும் இளகிய மனம் கொண்டவர். அதோடு விலை உயர்ந்த பட்டு சேலையை விற்று டிரைவரின் மகள் திருமணத்திற்கு உதவினார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது சொல்வார்கள். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் சாவித்திரி. இப்படி சினிமாவில் மட்டும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் சாவித்திரி ஒரு உதாரணமாகவே இருந்தார். இந்நிலையில் 100 சவரன் நகை திருடியது யார் என்றும் தெரிந்தும் நடிகை சாவித்திரி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சாவித்திரி செய்த செயல்:

ஒரு நாள் நடிகை சாவித்திரி வீட்டில் 100 சவரன் நகை காணாமல் போய்விடுகிறது. அந்த சமயத்தில் சாவித்திரி வீட்டில் பணிபுரிந்த பெண்ணும் காணாமல் போய்விடுகிறார். எல்லோரும் போலீசில் புகார் கொடு கண்டுபிடித்து தருவார்கள் என்று சொல்கிறார்கள். உடனே சாவித்திரி, அந்த நகை திருடியது ஒரு வேலை அந்த பணிபுரியும் பெண்ணாக இருந்தால் அவரை என் கண்முன்னே அடிப்பார்கள். என்னால் அதை பார்க்க முடியாது. 100 சவரன் நகை போனால் போகட்டும் என்று சொல்லிவிட்டார். இந்த அளவிற்கு இரக்கம் குணம் உடையவர் சாவித்திரி.

Advertisement