தனது தாயுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை சீதாவின் தற்போதைய நிலை.

0
63226
seetha
- Advertisement -

கொரோனா வைரஸினால் உலகமே என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவினால் 3691 பேர் பாதிக்கப்பட்டும், 99 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். கொரோனாவினால் நாடே அமைதி பூங்காவாக இருக்கும் சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து நடிகை சீதா அவர்கள் கூறியது,

-விளம்பரம்-
Seetha

- Advertisement -

உலகம் முழுவதுமே ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இன்பம், துன்பம் இரண்டுமே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பது ரொம்பவும் முக்கியம். இதுவரை நாம் யாருமே சந்திக்காத ஒரு சூழ்நிலை இது. கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இதை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். பரபரப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்த நாம் இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

ஒட்டுமொத்த உலகமே அமைதியான சூழலில் இருக்கிறது. டிராபிக் ஜாம், ஹாரன் சத்தம், காற்று மாசு, ஒலி மாசு என எதுவுமே இல்லாமல் அமைதி பூங்கா உள்ளது என்று சொல்லலாம். எந்த ஒரு டென்சனும், பிரஷரும் எதுவும் இல்லாமல் இருக்கிறோம். ஓடிக் கொண்டிருந்த நாம் தற்போது நின்று நிதானித்து யோசித்துக் கொண்டிருக்க வேண்டிய நேரம் இது.

-விளம்பரம்-
Seetha

நீண்ட நாட்களாக பேச வேண்டும் என நினைத்த உறவினர்களிடம் எல்லாம் நெருங்கி பேசமுடிகிறது. வீட்டை சுத்தம் செய்யும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கும். எங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள் தோட்டம் உள்ளது. தினமும் நான் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு பூஜை எல்லாம் முடித்து மாடிக்கு சென்று தோட்டங்களை ஒரு விசிட் பார்த்ததால் தான் எனக்கு அந்தக் பொழுதே போகும்.

பின் அன்றைக்கு சமையலுக்கு தேவையான காய்கறிகளை பறித்து கொண்டு வந்து சமையல் வேலையை தொடங்குவேன். நானும், என் அம்மாவும் வேலையை முடித்து விட்டு கொஞ்சம் நேரம் பேசி கொண்டு இருப்போம். சாயங்காலம் ஐந்து மணிக்கு மாடித்தோட்டத்துக்கு போய் பழைய பாடல்களைக் கேட்டுக்கிட்டே ஒவ்வொரு செடிக்கும் தண்ணீர் ஊற்றுவேன்.

Home Garden

உதிர்ந்த பழுத்த இலைகளை எடுத்து ஓரமாகப் போடுவது, செடிகளைப் பராமரிப்பது, அங்கிருக்கிற பூக்கள்கிட்ட பேசிக்கிட்டே தண்ணீர் ஊத்துவது என்று நேரம் போவதே தெரியாது. பின் நைட் ஒரு குளியல் போட்டுட்டு டின்னருக்கு ரெடி முடிப்போம். அப்புறம் அம்மாவும், நானும் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு தான் தூங்கப்போவோம்.

ஊரடங்கு உத்தரவு மட்டும் இல்லாமல் பெரும்பாலும் இது தான் என்னுடைய ரொட்டீன் லைப். ஷூட்டிங் இல்லாத நாள்களில் இப்படித்தான் வீட்டில் பொழுது போகும். அதனாலேயோ என்னவோ எனக்கு இந்த லாக் டவுண் நாள்களில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்று நடிகை சீதாவின் தன்னுடைய இயல்பு வாழ்க்கை குறித்து கூறினார்.

Advertisement