என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என எதிர்பார்த்தேன் – பார்த்திபனை பிரிந்த காரணம் சொன்ன சீதா.

0
1076
Seetha
- Advertisement -

90ஸ் களில் மிகப்பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆன் பாவம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் மட்டுமில்லாமல் சன்டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

காதல் திருமணம் :

இப்படி தென்’சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சீதா தமிழ் சினிமாவின் ஜாம்பவானான நடிகரும் இயக்குனருமான பாக்யராஜனிடன் உதவி இயக்குனராக இருந்த வந்தார் நடிகர் பார்த்திபன். இவர் நடித்திருந்த பாரதி கண்ணம்மா, வருவாயென, “புதிய பாதை” என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதற்கு பிறகு நடிகர் பார்த்திபனும் சீதாவும் வெகு காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தைகளும் பிறந்தனர் அதோடு ஒரு ஆன் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

- Advertisement -

இரண்டாவது திருமணம் :

இந்நிலையில் இருவரும் திருமண வாழ்கையில் நடந்த சில காரணங்களினால் 11 ஆண்டு காலமாக இருந்து வந்த திருமண வாழ்க்கையை முறித்து 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு நடிகை சீதா தன்னுடைய 43 வயதில் 2011ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை சீதாவின் முதல் கணவரான பார்த்திபன் தனது மனைவியை பற்றி சில விஷியங்களை கூறியிருந்தார்.

எதிர்பார்ப்பது தவறா :

இப்படி பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சீதா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் தன்னுடைய மனைவி அதிகம் எதிர்பார்த்ததுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணம் என்று கூறியதாக நிருபர் சீதாவிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சீதா நான் சிறிய குடுமபத்தில் இருந்து வந்தவள் தான். எனக்கு நடிகை சுஹாசினி ஒரு படத்தில் படுவதை போல “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” என்று நினைப்பவள். தன்னுடன் வாழும் கணவரிடம் இருந்து இந்த எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு எனக் கூறினார்.

-விளம்பரம்-

பார்த்திபன் சொன்னது பொய் :

மேலும் சீதா அவருடைய காதலை சொல்லும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நான் இருந்தேன் என்று பார்த்திபன் கூறினார். ஆனால் அதற்க்கு சீதா கூறியதாவது `நாங்கள் ஒன்றாக நடித்து கொண்டிருக்கும்போது அவர் தொடர்ந்து போன் செய்து அந்த மூன்று வர்த்தயை மட்டும் சொல் என்று கேட்பார். எனக்கும் அவரின் மீது காதல் இருந்ததினால் நான் ஒருநாள் “ஐ லவ் யூ” சொன்னேன். ஆனால் அதனை என்னுடைய அப்பா மற்றொரு போனில் கேட்டு பெரிய பிரச்சனை ஆனது. அப்படிதான் காதல் நிகழ்ந்ததே தவிர பார்த்திபன் சொல்வதை போல இல்லை அவர் பொய் சொல்கிறார் என்று நடிகை சீதா கூறினார்.

Advertisement