90ஸ் களில் மிகப்பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான “ஆன் பாவம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் நடித்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் மட்டுமில்லாமல் சன்டிவி, மெகா டிவி, சூர்யா டிவி என பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
காதல் திருமணம் :
இப்படி தென் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சீதா தமிழ் சினிமாவின் ஜாம்பவானான நடிகரும் இயக்குனருமான பாக்யராஜனிடன் உதவி இயக்குனராக இருந்த வந்தார் நடிகர் பார்த்திபன் படத்தில் நடித்திருந்தார். பார்த்திபனுடன் “புதிய பாதை” என்ற திரைப்படத்தில் இணைந்து நடிகை சீதா நடித்திருந்தார். இதற்கு பிறகு நடிகர் பார்த்திபனும் சீதாவும் வெகு காலமாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகளும் பிறந்தனர் அதோடு ஒரு ஆன் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இரண்டாவது திருமணம் :
இந்நிலையில் இருவரும் திருமண வாழ்கையில் நடந்த சில காரணங்களினால் 11 ஆண்டு காலமாக இருந்து வந்த திருமண வாழ்க்கையை முறித்து 2001ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு நடிகை சீதா தன்னுடைய 43 வயதில் 2011ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சதிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களும் சிறுது காலத்தில் பிரிந்து விட்டனர். ஆனால் நடிகை சீதாவின் மகன் இரண்டாவது திருமணம் ஆனா போது இவருடன் தான் வசித்து வருகிறார்.
ஷோசியல் மீடியா பிரபலம் :
தற்போது நடிகை சீதா திரைப்படங்கள், சீரியல்கள் என பிசியாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியான “டைகர்” என்ற திரைப்படத்தில் கூட நடிகர் ஆதரவாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தனக்கென ஒரு யூடுயூப் சேனலையும் நடத்தி வரும் சீதா அதில் 1.5 லட்சம் சப்கிரைப்பற்களை வைத்துள்ளார். மேலும் இந்த சேனலில் தன்னுடைய அன்றாட வாழ்க்கை, மாட்டிவிட்டு தோட்டம், சமையல் குறிப்பு என பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
வைரலாக புகைப்படம் :
இந்நிலையில் நடிகை சீதா தற்போது “சீதா எஸ் ராவண அழகி” என்ற போட்டோஷூட் எடுத்துள்ளார். அதில் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் மார்டனாக புடவையை அணிந்து புகைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.