உனக்கு தான் தெரியுதில்ல லவ் பண்ணா வெட்டுவான்னு, அப்புறம் ஏன் ? – ஓப்பனாக பேசிய ஷகீலா. வீடியோ இதோ.

0
4016
shakeela
- Advertisement -

காதலுக்கு எதிராக நடக்கும் ஆணவக் கொலைகளை எதிர்த்து தமிழ் சினிமாவில் கூட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில்கூட பாவ கதைகள் என்ற பெயரில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஆன வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்ன தான் இப்படி ஆணவக் கொலைகள் குறித்து திரைப்படங்கள் வந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது காதலுக்கு எதிரான ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் துவங்கி பல ஆணவக் கொலைகள் நடந்துள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் காதல் குறித்தும் அதனால் ஏற்படும் ஆணவக் கொலைகள் குறித்தும் பிரபல நடிகையான ஷகீலா கூறிய கருத்து வரவேற்பையும் சர்ச்சையையும்ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஷகிலாவின் ஆணவக் கொலைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த ஜாதிகள் இருப்பவர்கள்தான் எந்த ஜாதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதையும் மீறினால் உன்னை வெட்டுவேன் என்று ஆணவக் கொலைகள் எல்லாம் செய்கிறார்கள் இதுபோன்று காதலில் ஆணவக் கொலைகள் செய்வது சரியானதா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த ஷகிலா முதலில் இந்த ஆணவக்கொலை என்பது இப்போது மட்டும் இருக்கும் ஒரு விஷயம் இல்லை. இது ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்று ராஜா காலத்தில் இருந்து இருக்கும் ஒரு விஷயம். இப்போது உங்களுக்கு இதெல்லாம் சோசியல் மீடியா மூலமாக தான் தெரிகிறது. இது புதிய விஷயம் ஒன்றும் கிடையாது என்று ஷகிலா பதில் அளித்தபோது அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த சசிகலா இதையெல்லாம் ஆரம்பத்திலிருந்து இருக்கிறது அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வது உனக்குதான் தெரியுமே நீ காதலித்தால் அவன் உன்னை வெட்டுவான்னு என்று அப்புறம் ஏன் அவனை லவ் பண்ற என்று பதில் அளித்தார்.

அதற்கு அந்த தொகுப்பாளரும் அப்போ காதலிக்கும்போது ஜாதி பார்த்து தான் காதலிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா காதல் என்பது இதையெல்லாம் தாண்டி வரும் ஒரு விஷயம் இல்லையா என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஷகிலா, இங்கே எத்தனை பேர் காதலித்து எத்தனை பேர் திருமணம் செய்து எத்தனை பேர் நன்றாக இருக்கிறார்கள். இங்கே ஒரு நாள் காதல் கூட இருக்கிறது. 10 வருடம் காதலித்து 11 வது வருடம் திருமணம் செய்து 12 வது வருடம் பிறந்தவர் கூட இருக்கிறார்கள். அப்புறம் என்ன எந்த காதல் கருமாந்திரம் எல்லாம். அதேபோல நான் ஒரு விஷயம் கேட்கிறேன் லவ் என்றால் என்ன அதனுடைய முடிவு என்ன என்று கேட்டதற்கு அந்த தொகுப்பாளர் திருமண வாழ்க்கை என்று சொன்னார் திருமணம் முடித்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அந்த தொகுப்பாளர் உடலுறவு நடக்கும் என்று சொன்னார்.

-விளம்பரம்-

அதற்கு ஷகிலா ‘நான் சொல்கிற காதல் இதுதான் எனக்கு தெரிந்து லவ் எப்போதும் சபலத்தில் தான் முடியும். நீங்கள் ஒருத்தரை பார்த்ததும் அவர் அழகாக இருக்கிறார் என்று தானே உங்கள் மனதில் முதலில் தோன்றும். இங்கே காமம் தான் முதலில் வரும் அன்பு எல்லாம் அப்புறம்தான் வரும். ஒருவரை பார்த்த உடனே உங்களுக்கு பிடித்து விடுகிறது இல்லையா ? அது எப்படி. ஒருவேளை ஒரு பெண் பார்க்கவே மிகவும் கேவலமாக இருக்கிறார் அந்த பெண்ணை பார்த்து இவர் நல்ல குணம் கொண்டவள் என்று நினைப்பீர்கள் ? இல்லை என்னடா இந்த பொண்ணு இப்படி கேவலமா இருக்கு என்று தானே நினைப்பீங்க. அதுவே நன்றாக இருந்தால் நன்றாக இருக்கிறது இது நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement