10 வயதில் பிசினஸ் ஆரம்பித்த விஜய் பட நடிகையின் மகன் – முதல் Productஐ வாங்கிய நடிகை.

0
468
shilpa
- Advertisement -

விஜய் பட நடிகையின்மகன் பத்து வயதிலேயே தொழிலதிபராகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் பின் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அப்படியே இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து ஷில்பா நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் இருந்தார். இதைத்தொடர்ந்து சில்பா செட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

ஷில்பா ஷெட்டியின் திரைப்பயணம்:

இவர் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று இந்தியா முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் சில்பா செட்டி பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சில்பா செட்டியால் இரண்டாம் குழந்தை பெற்று எடுக்க முடியாத காரணத்தினால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்.

ஷில்பா ஷெட்டி குடும்பம்:

இது குறித்து அப்போது ஷில்பாவை பலரும் விமர்சித்து இருந்தார்கள். தற்போது இவர் படங்களில் நடித்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் யோகா தொடர்பான விழிப்புணர்வையும் சில்பா செட்டி நடத்தி இருக்கிறார். மேலும், இவர் ஐபிஎல் உரிமையாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மட்டுமில்லாமல் இவர் பல பிசினஸ்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டியின் மகன் பிஸ்னஸ் செய்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஷில்பா மகன் செய்யும் பிஸ்னஸ்:

அதாவது, ஷில்பா செட்டிக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருக்கிறார். அவருடைய பெயர் விஷான். தற்போது இவர் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இவருடைய பிசினஸ் நிறுவனத்தின் பெயர் VRKICKS. இதன் மூலமாக நல்ல தரமான ஷூக்கள் தயாரித்து விஷான் விற்பனை செய்து வருகிறார். இந்த சின்ன வயதிலேயே அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகனை ஊக்குவிக்கும் விதமாக இவர் விஷான் தயாரிப்பில் உருவான முதல் ஷூவை வாங்கி இருக்கிறார். விஷான் தொழிலதிபர் ஆகி இருப்பதை ஷில்பா ஷெட்டி சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார். இது குறித்த வீடியோ ஒன்றை ஷில்பா பதிவிட்டு இருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, சிறு குழந்தைகளும் அவர்களின் பெரிய கனவுகளும் எப்போதும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த தொழிலின் முயற்சி யோசனை மற்றும் கருத்து வடிவமைப்புகள் அனைத்தும் அவர் தான். தொழில் முனைவோருக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இளமைப் பருவத்தில் கிடைக்கும் வருமானத்தில் சிலவற்றை தொண்டு நிறுவனத்திற்காக வழங்குவதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு தற்போது வெறும் பத்து வயது தான். இந்த தலைமுறை அம்மாவை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. மிகவும் பெருமை. ஆல் தி பெஸ்ட் என் மகனே என்று பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷில்பா செட்டிக்கும், அவருடைய மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement