18 வயதில் 17 படங்கள், 17 வயதில் தற்கொலை செய்துகொண்ட ஷோபா – சோபாவின் மறுபக்கம்

0
632
- Advertisement -

சிறு வயதிலேயே சினிமாவில் பல சாதனைகள் செய்த நடிகை சோபாவை பற்றி பலரும் அறிந்த பக்கத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஷோபா. இவர் கேரளாவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் லட்சுமி மகாலட்சுமி. இவர் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் அச்சாணி, நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு ஒரு உலகம் போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் மூலம் சோபாவுக்கு திரை உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருந்தது.

- Advertisement -

சோபா நடித்த படங்கள்:

அதிலும் இவர் நடித்த அழியாத கோலங்கள், மூடுபனி உள்ளிட்ட படங்கள் எல்லாம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. மேலும், இவருடைய நடிப்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். இதனாலே இவரை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து பாவித்திருந்தார்கள். இயக்குனர் துரை இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான பசி படத்திற்காக இவர் தேசிய விருதையும் வாங்கி இருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. அதிலும் சோபாவின் முக பாவனைகள் அந்தப் பாடலுக்கு கூடுதல் அழகே தரும் என்று சொல்லலாம்.

சோபா திருமணம்:

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு பிரகாசமாக செல்லும் எரி நட்சத்திரம் என்று சோபாவை பலரும் குறிப்பிடுவார்கள். தன்னுடைய 17 வருட உலக வாழ்க்கையில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல சாதனைகளை சோபா செய்து இருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா அவர்கள் சோபாவின் ஒவ்வொரு அசைவையும், அழகான நடிப்பையும் அழகாக காண்பித்திருந்தார். இவர்கள் இருவருடைய உறவு திருமணம் வரை நீண்டது. தமிழ் திரை உலகமே வியந்து பார்த்த நடிகை சோபா.

-விளம்பரம்-

சோபா மரணம்:

இன்னும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், 1980 ஆம் ஆண்டு திடீரென்று சோபா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 17 வயது தான். இவருடைய தற்கொலை தான் புரியாத புதிராகவே இருக்கிறது. இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியிலும் திரை உலகின் மத்தியிலும் பேரிழப்பாக இருந்தது. குறைந்த வயதில் யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளை சோபா செய்திருக்கிறார்.

சோபா செய்த சாதனை:

மேலும், சோபாவின் நேசத்தையும் பிரிவையும் தாங்க முடியாமல் தான் தனது மூன்றாம் பிறை படத்தில் பாலு மகேந்திரா குறிப்பிட்டு இருக்கிறார். 18 வயதிலேயே 17 படங்கள் நடித்து சாதனை செய்திருந்தவர் ஷோபா. மேலும், 1983 ஆம் ஆண்டு மலையாள இயக்குனர் கே ஜி ஆர் இயக்கத்தில் வெளியான லேகாயுதே மரணம் ஒரு பிளாஷ்பேக் படம். அது நடிகை சோபாவின் வாழ்க்கையும், அவருடைய தற்கொலை மரணத்தையும் தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது, மாநில விருது, ஊர்வசி விருது என தன்னுடைய 17 வயதிலேயே தென்னிந்திய சினிமா உலகை கலக்கிய நடிகை சோபாவை யாராலும் மறக்க முடியாது.

Advertisement