பிரபல நடிகை சிவரஞ்சனி, விஜயகாந்த் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகர் சிவரஞ்சனி. இவருடைய பூர்வீகம் சென்னை மயிலாப்பூர். மேலும், சிவரஞ்சனி மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆர்வமும், திறமையும் கொண்டவர். தனது கல்லூரி படிப்பு படிக்கும் காலத்திலேயே பல நாடகங்களில் நடித்தும், பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுகளை வாங்கிக் குவித்தவர்.
இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 90ஸ் காலகட்டங்களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. அது மட்டும் இல்லாமல் இவருடைய வசீகரமான கண்ணுக்கு பல பேர் அடிமை என்று சொல்லலாம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் 1999 ஆம் ஆண்டு, தெலுங்கில் பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சிவரஞ்சனி குறித்து:
நடிகர் ஸ்ரீகாந்த் வேறு யாரும் இல்லை ‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்க்கு மூத்தஅண்ணனாக நடித்தவர் தான். திருமணத்திற்கு பின்னர் நடிகை சிவரஞ்சனி ஆந்திராவிலேயே செட்டில் ஆகி விட்டார். தற்போது இவர் குடும்பம், குழந்தைகள் என்று பிசியாக உள்ளார். தனது குடும்பத்திற்காக 27 வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சிவரஞ்சனி சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு பிறகு குழந்தைகளுக்காக நடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். மேலும், திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனக்கு மூன்று முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.
சிவரஞ்சினி பேட்டி :
ஆனால் அது என்ன படங்கள் என்று அவர் கூறவில்லை. அதோடு தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் குறித்து அவர் அந்த பேட்டியில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முதலில் முரளி குறித்து பேசி அவர், முரளி மிகச்சிறந்த நடிகர் என்றும், தனக்கு நடிக்கும்போது அதிகமான டிப்ஸ்களை கொடுப்பார் என்றும் புகழ்ந்துள்ளார். அதேபோல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் நடிகர் கார்த்தி உடன் ஒரு படத்திலும், சென்னையில் விஜயகாந்த் உடன் ராஜதுரை படத்திலும் அவர் நடித்திருந்தாராம்.
சிவரஞ்சினிக்கு உதவிய விஜயகாந்த்:
அப்போது, இரண்டு படங்களின் சூட்டிங் தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்ற நிலையில், ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரச்சனையை கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இடம் பேசி தனக்கு உதவியதாக கூறியுள்ளார். அதாவது இயக்குனர் எஸ்ஏசியுடன் பேசி, தன்னுடைய டேட்ஸ் களை அட்ஜஸ்ட் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சக நடிகர், நடிகைகளின் பிரச்சனைகளையும் மிகவும் சிறப்பாக விஜயகாந்த் தீர்த்து வைப்பார் என்றும் சிவரஞ்சனி விஜயகாந்தை பாராட்டியுள்ளார்.
நலம் விசாரித்த விஜயகாந்த்:
மேலும், நடிகர் விஜயகாந்த் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் கூட தன்னுடைய கணவரிடம் ஒரு விஷயமாக தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது கூட தன்னை விஜயகாந்த் அவர்கள் நலம் விசாரித்ததாகவும் தன்னுடைய மகிழ்ச்சியை சிவரஞ்சனி பகிர்ந்துள்ளார். சமீபத்தில், வெளியான ‘கோட்’ படம், விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்தோடு ஒப்பிட்டு பேசி வரும் நிலையில், அதற்கும் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இன்றும் தன்னை ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளது நினைத்தால் உற்சாகமாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் சிவரஞ்சனி கூறியுள்ளார்.