தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவை பதட்டத்திலேயே வைத்து வருகிறார். கடந்த சில நாட்களாக ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு சினிமா துறையின் பல பிரபலங்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வருகிறார் ஸ்ரீ ரெட்டி.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல. முதலில் சிறு சிறு நடிகர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டு வந்த ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவின் முக்கிய தலைகளை குறிவைத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் பிரபல பாகுபலி புகழ் ராணவின் தம்பி அபிராம் டகுபதி மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் போன்றவர்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதே அளவு இவருக்கு பல நடிகைகளின் ஆதரவும் பெருகி வருகிறது. இதனால் ஸ்ரீ ரெட்டி மேலும் சில பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு வருகிறார்.இதற்கிடையே ஸ்ரீ ரெட்டி லீக்ஸில் அடுத்த பலியாடாக ஆனவர் பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் தான்.அவர் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருப்பதாகவும். அதில் 16 வயது சிறுமிகளை கூட விட்டுவைக்கவில்லை என்று ட்வீட் செய்துள்ளார்.
#srireddyleaks This Executive producer Vakada Appa Rao, He sexually abused and exploited hundreds of female artists including 16 yrs girls also?
మెగా స్టార్ చిరంజీవి గారు ఇతను మీ పేరు చెప్పుకుని ఎంతో మంది ఆడవారి జీవితాలను నాశనం చేసాడు, దయచేసి ఇటువంటి వారిని ప్రోత్సహించకండి ? pic.twitter.com/gXkG9nBdCW
— Sri Reddy (@MsSriReddy) April 13, 2018
இந்த தகவளை கேட்டு மிகவும் அதிர்ச்சியான அப்பா ராவ் ஸ்ரீ ரெட்டி லீக்ஸில் மாட்டிய மற்ற பிரபலங்கள் போலவே ஸ்ரீ ரெட்டியின் ட்வீட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ரெட்டி லீக்ஸ் போடபட்ட நாட்களில் இருந்து ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசி வரும் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா அப்பா ராவை பற்றிய இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து நீங்களா இப்படி அப்பா ராவ் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.