கடந்த 24ம் தேதி துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை. இவரது திடீர் மரணத்தில் சந்தேகங்கள் வலுத்து வருகிறது.
முதலில் கார்டியாக் அரெஸ்ட் என கூறப்பட்ட அவரது மரணம் பின்னர் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என அறிக்கை வந்தது. தற்போது துபாயில் பப்ளிக் பிராசக்கியூஷன் துறை இந்த மரணத்தை விசாரித்து வருகிறது.
இந்த மரணத்தில் ஒரு தெளிவான முடிவு வந்த பின்னரே அவரது உடல் இந்தியா அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலில் அவரது அறைக்கு அடிக்கடி ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார்.
இந்த போன் காலினால் ஸ்ரீதேவி மிகவும் மனா உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. அதன்பின்னரெ அவர் அளவுக்கு மீறி மது அருந்தியுள்ளார். பின்னர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனால் அந்த மர்ம நபரை அழைத்து விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மர்ம நபருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என துபாய் போலீஸ் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது .