பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜயகுமார்- மஞ்சுளாவிற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளை இருப்பது நமக்கு தெரியும். இதில் நடிகை ஸ்ரீதேவி என்பவரை நம்மில் சில நபர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கிருக்கிறார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது.
1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த நடிகை ஸ்ரீதேவி சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். 1992 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடித்த “ரிக்ஷா மாமா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
நடிகை ஸ்ரீதேவி தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான “காதல் வைரஸ் ” என்ற படத்தில் கதையாகியாக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் ஜீவா நடித்த “தித்திக்குதே “தனுஷ் நடித்த “தேவதையை கண்டேன்” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவிக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி தனது மகளின் 2வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.