அந்த காலத்தில் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் என பிரம்மாண்டமாக நடித்து அசத்தியவர் நடிகை ஸ்ரீபிரியா. ஸ்ரீதேவிக்கு போட்டியாக நடித்து வளர்ந்தவர் ஸ்ரீபிரியா.
இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு நாகார்ஜுன் மற்றும் ஸ்நேகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஸ்நேகா 1996ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை லண்டனில் படித்தார். அங்கு வழக்கறிஞர் துறையில் பட்டம்பெற்று ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார் ஸ்நேகா.
கடந்த பல ஆண்டுகளாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்தார் ஸ்நேகா. ஸ்ரீபிரியா கடந்த 2013ஆம் ஆண்டு மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் பிரஸ் மீட்டில் தனது மகள் ஸ்நேகாவை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ரீபிரியா.
பார்க்க அழகாக வசீகரமாக இருக்கும் ஸ்நேகாவிடம் நடிக்க வருவீர்களா எனக் கேட்டால், எனக்கு பெரிய ‘லாயர்’ ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம் எனக் கூறியள்ளார்.