திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இறந்த கணவர் – நீண்ட இடைவேளிக்கு பின் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த சுருதி. எந்த தொடரில் சீரியல் தெரியுமா?

0
456
- Advertisement -

மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா என்ட்ரி கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுருதி சண்முகப்பிரியா. இவர் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த தொடர் தான் நாதஸ்வரம்.

-விளம்பரம்-

இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த தொடருக்குப் பின்னர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சுருதி சண்முகப்ரியா குறித்த தகவல்:

அதேபோல இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிகண்ணம்மா தொடரில் சுருதி நடித்து இருந்தார். இந்த தொடரில் இவர் பாரதியின் அக்காவாக நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார். இருந்தாலும், இவர் எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அரவிந்த் -சுருதி சண்முகப்ரியா:

மேலும், தான் அடிக்கடி எடுக்கும் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
பின் இவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் தான் மீடியாவில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இவர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.

-விளம்பரம்-

ஸ்ருதி கணவர் இறப்பு:

அதன் பின் இவர்களுடைய திருமணம் நடந்தது. இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். திருமணம் ஆகி அரவிந்த் -சுருதி சண்முகப்ரியா இருவரும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். ஆனால், யார் கண் பட்டுதோ தெரியவில்லை திடீரென்று அரவிந்த்க்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் சுருதி மனம் உடைந்து போய் விட்டார். ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் மறைவு சீரியல் உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. ரசிகர்கள் பலர் சுருதிக்கு ஆறுதல் கூறி இருந்தார்கள்.

ஸ்ருதி நடிக்கும் புது சீரியல்:

இந்த நிலையில் கணவர் இறப்பிற்கு பின் சுருதி புதிதாக நடிக்கும் சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் சுருதி நடிக்கும் லட்சுமி தொடரில் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா நடிக்கிறார். தற்போது அதற்கான புகைப்படங்களை தான் சோசியல் மீடியாவில் சுருதி பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவருடைய மன உறுதியை பாராட்டி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

Advertisement