பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு வாழ்நாள் அதிக என புள்ளி விவரங்கள் சொல்லுகிறது. இருந்தும் சில சமயங்களில் பெண்களும் வயது முதிர்ச்சியினால் ஆண்களுக்கு முன்னரே இறந்துவிடுகின்றனர். அதிலும் சரியாக சராசரி வாழ்க்கை ஆயுகாலம் தாண்டாமல் 30 வயதிற்குள் இறந்து போவதெல்லாம் மிகக் கொடுமை. அப்படியாக 30 வயதிற்குள் பல்வேறு காரணத்தால் இறந்து போன தமிழ் நடிகைகளை பார்ப்போம்.
1.நடிகை சோபனா:
சின்னத்திரையில் கலக்கியதன் மூலம் பெரிய திரையில் ஓர் இடத்தைப் பிடித்தவர் சோபனா. இவருக்கு வாழ்க்கை சோகத்தில் அமைந்ததால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.
2.நடிகை மோனால்:
சிம்ரனின் தங்கையான இவர் அவரைப் போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர், அதற்கான காரணமாக எழுதி வைத்து ‘தன் வாழ்க்கையில் நல்ல ஆண்களையே பார்க்கவில்லை’ என்பது தான்.
3.நடிகை பிரதியுஷா:
இவர் ஜூஸில் விஷம் கலந்து பொது இடத்தில் காருக்குள்ளேயே அமர்ந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவருடைய காதலரும் தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினார். அதிர்ஷ்ட்டவசமாக அவரது காதலர் உயிர் தப்பினார்.
4.ஜெயலட்சுமி:
எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான இவர் தனது உடல் நலக் குறைவாள் மிக இளம் வயதிலேயே இறந்து போனார்.
5.திவ்யபாரதி:
மிக மிக இளம் வயதிலேயே தென்னிந்திய படங்களில் துவங்கி பாலிவுட் வரை மிக வேகமாக வளர்ந்தவர் இவர். திடீரென தனது மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். இறந்த போது அவருக்கு வயது 19.
6.நடிகை சபர்ணா:
சென்னை மதுரவாயில் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் இறந்து போனார். இன்னும் அவரது கேஸ் நடைபெற்று வருகிறது.