தேசிய விருது வாங்கின எனக்கு யாரும் வாய்ப்பு தரல, இது தான் என்ன காப்பாத்துச்சு – சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன காரணம் குறித்து சொன்ன சுகன்யா.

0
1411
sukanya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இயக்குனர் பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்தார். இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இவரை எல்லோரும் லேடி கமல் ஹாசன் என்று பெயர் வைத்து அழைத்திருந்தார்கள். மேலும், இவர் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார். அதோடு இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘சோழர்கள் வருகிறார்கள்’ – நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இதோ.

சுகன்யாவின் திரைப்பயணம்:

மேலும், நடிகை சுகன்யா அவர்கள் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

-விளம்பரம்-
Sukanya

சுகன்யாவின் சின்னத்திரை பயணம்:

அதன் பிறகு சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், சுகன்யாவின் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழாவிலும் பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். பின் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது நடிப்புத் திறமைக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா அவர்கள் ஒரு கட்டத்தில் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. பின் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டார்.

சினிமாவில் இருந்து விலக காரணம் :

சுகன்யா அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமான ஓராண்டிலேயே சுகன்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடினார். பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். சுகன்யா ஒரு பரத நாட்டிய கலைஞரும் கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சுகன்யா லண்டன் சென்று அங்கு பாரத நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் 2001 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுகன்யா, திடீரென்று சினிமாவில் இருந்து காணாமல் போன காரணம் குறித்து பேசி இருந்தார்.

இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் :

ஆதில் பேசிய அவர், மலையாளத்தில் ‘கானாகீனா’னு படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனா, அத பத்தி யாரும் பேச, படங்களில் நடிக்க நான் தயாரா இருந்தேன். ஆனா, யாரும் என்னை அழைக்கவில்லை. பாரதம் தான் என்னை காப்பாற்றியது என்றார். மேலும், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்று கேட்ட போது ‘வாழ்க்கையில கல்யாணத்தை விட நிறைய விஷயம் இருக்கு, கல்யாணம் என்பது ஒரு சின்ன வட்டம். அதை விட உருப்படியா நிறைய விஷயம் செய்து கொண்டு இருக்கிறேன்.’ என்று கூறி இருந்தார்.

Advertisement