சினிமா துறையில் உள்ள நடிகைகளில் ஒரு சிலர் விபச்சார வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கூட பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்தி பட இயக்குனர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
இந்தி நடிகை ஸ்வேதா பாசு , இந்தியில் 2002 ஆண்டு வெளியான ‘மாக்டெ’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், நடிகையாகயும் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழில் 2013 ஆம் ஆண்டு கருணாஸ் நடித்த ‘சண்டமாமா ‘ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் .
தெலுகு, இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது நடிகை ஸ்வேதா,பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
நீண்ட நாள் நண்பராண ரோஹித்திடம், நடிகை ஸ்வேதா தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழித்து அவருடைய காதலை ரோஹித் ஏற்றக்கொள்ள, இவர்கள் இருவர்க்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றுது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.