மாடலிங் துறையில் இருந்த போது சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது அதன் பின்னர் ஒற்றன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார். மஹாராஷ்டிரவில் பிறந்தாலும் இவருக்கு தமிழ் நன்றாக தெரியும் மேலும் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு என்று பல மொழி படங்களில் நடித்தாலும் தமிழில் தான் இவர் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.
ஒற்றன் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.2004 விஜய் நடித்த மதுரை படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியதுடன் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.அதன் பின்னர்
*தக்க திமி தா
*கோடம்பாக்கம்
*கல்வனின் காதலி
*சம்திங் சம்திங்
வீராப்பு ....போன்ற பல தமிழ் படங்களில் ஐட்டம் டான்சராகவும் , துணை நடிகையாகவும் நடித்திருந்தார் பின்னர் 2007 அம் ஆண்டு அந்த நாள் ஞாபகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த தேஜாஸ்ரீக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை.அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு 2012முதல் மராத்தி சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார்.
அங்கேயும் ஒரு வருடம் மட்டுமே அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது.பின்னர் 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தமிழில் 2015 ஆம் ஆண்டு பரஞ்சோதி என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துவிட்டு சென்றவர் தான் இதுவரை என்னவானர் என்று தெரியவில்லை.




