திருமணம் செஞ்சிட்டு அப்படி பண்றது புடிக்காது – முதன் முறையாக தன் திருமணம் குறித்து பேசிய திரிஷா.

0
920
trisha
- Advertisement -

திருமணத்திற்கு ரெடி என்று நடிகை திரிஷா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும் திரிஷா அவர்கள் சமீப காலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரிஷா:

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் திரைப்படம் திரிஷாவிற்கு தமிழ் சினிமா உலகில் ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இப்படி இவர் சினிமாவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருந்தாலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திரிஷா அளித்த பேட்டி:

அடிக்கடி பிரபல நடிகர்களுடன் இவருக்கு திருமணம் குறித்து சலசலப்பு சோசியல் மீடியாவில் கிளம்பி கொண்டு தான் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த திரிஷாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் கூறியிருந்தது, மற்றவர்கள் சாதாரணமாக என்னிடம் எப்போது திருமணம் என்று கேட்டால் கூட பதில் சொல்வேன். ஆனால், யாராவது ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேட்டால் அவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

திருமணத்துக்கு பிறகு விவாகரத்து எனக்கு வேண்டாம். விவாகரத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது. மகிழ்ச்சியாக இல்லாத ஒரு திருமணத்தை செய்து கொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர் தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அதோடு த்ரிஷா மற்றும் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தில் முடிந்த திரிஷா திருமணம்:

இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திரிஷா விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதேபோல திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார் திரிஷா. ஆனால், இவர்கள் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற வில்லை. திருமணத்திற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இந்த திருமணம் நின்றுபோனது. வருண் மணியன் தமிழில் காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement