இந்த காரணத்தினால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டேன் – நடிகை திரிஷா.

0
7880
Trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு இவர் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for chiranjeevi 152

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். கடந்த ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் திரிஷா நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் 96 படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை தன்வசம் ஆக்கினார்.

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் டோலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த தகவல் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பரவி வருகிறது. நடிகை திரிஷா அவர்கள் தற்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். திரிஷ்யம் என்ற படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார். இதனிடையே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிக்க நடிகை த்ரிஷாவும் ஒப்பந்தமானார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ரெஜினா அந்த பாடலுக்கு மிகச் சிறப்பாக ஆடி உள்ளார் என்று சமீபத்தில் கூட மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டியிருந்தார். இதுவரை இந்த படத்தின் டைட்டில் ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேச்சுவாக்கில் சிரஞ்சீவி அவர்கள் உலறிவிட்டார். இது பரபரப்பானது. இதையடுத்து அவர் இயக்குனரிடம் மன்னிப்பும் கேட்டார். மேலும், இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா அவர்கள் இந்த படத்தில் இருந்து தான் திரிஷா விலகி விட்டதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து திரிஷா கூறியது, சில நேரங்களில் ஆரம்பத்தில் செல்வது ஒன்று, பின்னர் நடப்பது ஒன்றாக இருக்கிறது. படக்குழு உடனிருந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நான் இந்த படத்திலிருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன். இந்த படம் நன்றாக வர படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Image result for chiranjeevi trisha

என்னுடைய அன்பான தெலுங்கு ரசிகர்களை வேறு ஒரு நல்ல படம் மூலமாக சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். திரிஷாவின் இந்த திடீர் விலகல் முடிவுக்கு காரணம் வேறு சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது கூட காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிரஞ்சீவியின் ஸ்டாலின் என்ற படத்தில் திரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை நடிக்க வைப்பதாகவும் ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது. திரிஷா அவர்கள் பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement