சீரியலில் இருந்தப்பவே நல்லா இருந்தாங்க. சினிமாவிற்கு போய் எப்படி மாறிட்டார் பாருங்க.

0
2107
- Advertisement -

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார்.

- Advertisement -

மேலும்,தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன்.தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இறுதியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்து இருந்தார். இதை தொடர்ந்து நிதின் சத்யா இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான லாக் அப் படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வரும் அம்மணி சமீப காலமாக உடல் எடையை குறைத்து வருகிறார். இதனால் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் வாணி போஜன்.

-விளம்பரம்-
Advertisement