#Metoo விவகாரம் இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பல்வேறு நடிகைகளும், பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தோழிகளை குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர்.
நீண்ட வருடத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர் கூட தற்போது #metoo ஹேஸ்டேக்காள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகை விஜி சந்திரசேகர் வாலிப வயதில் தனுக்கு நேர்ந்த தொல்லைகளை ப்படி சமாளித்தேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை விஜி சந்திரசேகரிடம் #Metoo குறித்து கேள்விகேட்கப்ட்ட போது , #Metoo பிரச்சனை உலகம் முழுவதும் இறுகியது. 5 வயது குழந்தை முதல் 75 வயது கிழவி வரை பாதிக்கபட்டவராக இருக்கின்றனர்.
எனக்கும் சிறு வயதில் சில பேர் தவறாக நடக்க முயன்றுள்ளனர். நான் பேருந்தில் செல்லும் போது ஒரு சிலர் என்னை பின்னல் இருந்து தடவினார். அப்போது நான் வைத்திருந்த பின்னை வைத்து அவரது கைகளில் நான் கிழித்து விட்டேன். அந்த தழும்புகள் கண்டிப்பாக அவர்களது கையில் இன்னும் இருக்கும். என்னை தொட யாருக்கும் தைரியம் இல்லை. என் அனுமதி இல்லாமல் என்னை தொட்டால் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.