தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.
மேலும், இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாகவும், ரக்ஷ்னுக்கு ஜோடியாகவும் நடிகை நிரஞ்சனி நடித்திருப்பார். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். பொதுவாகவே சினிமா உலகில் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை படங்களில் நடிகர், நடிகை, இயக்குனர் என அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் எல்லாம் அந்த வகையில் வந்தவர்கள் தான்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நிரஞ்சனி. தற்போது இவர் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அகத்தியன் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதும் பெற்றார். இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் உள்ளார்கள். கார்த்திகா, விஜயலட்சுமி, நிரஞ்சனி ஆவார். இதில் கார்த்திகா என்பவர் திரு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் ஏற்கனவே டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
அடுத்து நடிகை விஜயலட்சுமி அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஆவார். இவர் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவர் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்த பண்டிகை என்ற படத்தை தயாரித்து இருந்தார்.
தற்போது இவர் டிவி தொடர்களில் நடித்தும்,வெப் சீரிஸ்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் மூன்றாவது மகளான நிரஞ்சினி தற்போது சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார். இவர் பி.எஸ்.சி.எலெக்ட்ரானிக்ஸ் படித்து விட்டு காஸ்ட்யூம் டிசைனர் ஆவார். இவர் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள்.