அதிலும் குறிப்பாக மஹத் , யாஷிகா, ஷாரிக் , ஐஸ்வர்யா இவர்கள் செய்யும் அத்து மீறல்கள் தான் ஏறலாம் . ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யா செய்த அநகாரிக செயலை பொன்னம்பலம் சுட்டிக்காட்டியதிலிருந்து ஐஸ்வர்யா கொஞ்சம் அடங்கியே இருந்தார்.
ஆனால், சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிட் நைட் மசாலா வீடியோ ஒன்றில் ஐஸ்வர்யா செய்த செயல் பார்ப்பவர்களை உச்சக்கட்ட எரிச்சலை உள்ளாகிவிடும். நேற்று ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவில் ஷாரிக் சட்டை இல்லாமல் கார்டன் ஏரியாவில் உடற்பயிற்ச்சி செய்து கொண்டிருக்கிறார். உடனே ஐஸ்வர்யாவும் ‘தானும் உடல் பயிற்சி செய்வதாக கூறி உடை மாற்றி வருகிறார் .
அப்போது மஹத் மற்றும் ஷாரிக்கும் புகைபிடிப்பதற்காக பாத்ரூமில் செல்கின்றனர் , உடனே அவர்கள் பின்னால் சென்ற ஐஸ்வர்யாவும் ‘எனக்கும் ஒரு தம் கொடுங்கள் ‘ என்று கூறிக்கொண்டு கதவை முடிகொள்கிறார். அதன் பின்னர் வெளியே வரும் ஐஸ்வர்யா தனது உடற் பயிற்ச்சிகளை செய்ய துவங்கி விடுகிறார்.
இத்தனை நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசுவது , அத்து மீறி நடந்துகொள்வது என்று தான் இருந்து வந்தது . ஆனால் , ஒரு பெண்ணாக இருந்து கொண்டு பல கோடி நேயர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஆண்களுடன் சேர்ந்து புகைபிடித்த ஐஸ்வர்யாவின் செயலை கலாச்சார சீர் கேடு என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது.