நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இரவு வேளையில் அனைவரும் படுக்க சென்றுவிட்ட பின்னர் ஐஸ்வர்யா, ஜனனி, டேனி ஆகியோர் படுக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அப்போது டேனியிடம், ஜனனனி
ஐயர் 'அவளுடைய (ஐஸ்வர்யா) அம்மாவை பாலாஜி அசிங்கமாக பேசிவிட்டார் அதனால் தான் இவ அப்படி செய்றா ' என்று கூறுகிறார். அதற்கு டேனி 'அவர் அப்படி சொன்னா நேரடியா போய் பிக் கிட்ட சொல்லு அப்படியும் பதில் வர்லையா கமல் சார் கிட்ட சொல்லிடு ' என்றார்.
அதற்கு ஐஸ்வர்யா 'அவங்க என்னோட அம்மவை பத்தி பேசினது என்னோட மைண்ட்-ல இருக்கு. ஷாரிக்கையும் என்னையும் பற்றி பேசறாங்க.ஷாரிக் பேமிலி பெரிசு தான் எனக்கு பேமிலி இல்ல.பேமிலி அவங்களுக்கு (பாலாஜி)பாலாஜி என்னுடைய கண்டிஷன் தெரியுமா நான் என்னுடைய அம்மவுடன் இருந்தது இல்லை. என் அம்மா இறந்து விட்டார்கள் அது அவர்களுக்கு தெரியுமா.என் அம்மா பத்தி சொல்ல எனக்கு இந்த ஷோ வேணும்." என்று கூறியிருந்தார்.
பாலாஜி, ஐஸ்வர்யாவின் அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டியது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம் தான். அதனால் தான் அவரை இப்படி பழிவாங்குகிறார் என்று தன்னுடைய தவறை நியாயப்படுத்துவது போல தெரிந்தாலும். அவர் முறைப்படி பாலாஜியிடம் பேசி இருக்கலாம் அல்லது டேனி சொன்னது போல பிக் பாஸிடமோ, காமலிடமோ புகாரளித்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக தனக்கு கிடைத்த அதிகாரம் மூலம் பாலாஜியை மட்டுமின்றி அனைவரயும் தனிப்பட்ட முறையில் பழி தீர்த்து கொள்வது போல தான் இருக்கிறது ஐஸ்வர்யா செய்து வரும் செயல்கள் என்பது தான் உண்மை.




