பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வரம் வெளியேற போவது யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், சென்ராயன், ஜனனி, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இதில் யார் வெளியேற போகிறார் என்று மக்கள் ஏற்கனவே தீர்மானித்து இருந்தனர்.
அது வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தான் என்பது சந்தேகம் இல்லாமல் நமக்கு தெரியும். அது போலவே இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிய் இருந்து ஐஸ்வர்யா வெளியாகியுள்ளார் என்று தகல்கள் வெளியாகியுள்ளது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒரு விடயம் தான்.
ஐஸ்வர்யா கடந்த 7 வாரங்களுக்கு மேலாக நாமினேஷனில் வராமல் இருந்து வந்தார். இவர் எப்போது நாமினேஷனில் வருவார் என்று மக்கள் அனைவரும் காத்துக் காத்துக்கொண்டிருந்தனர். அதற்கேற்றாற் போல இந்த வாரம் அவர் நாமினேஷனில் இடம் பெற்றார்.
இந்த வாரம் தொடங்கிய நாளில் இருந்தே ஐஸ்வர்யாவிற்கு தான் மிகவும் கம்மியான வாக்குகள் பதிவாகி இருந்தது. நமது வலைத்தளத்தில் நடத்திய வாக்கெடுப்பிலும் சரி பல்வேறு வலைத்தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சரி, ஐஸ்வர்யாவிற்கு தான் மிகவும் கம்மியான வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.