கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சன் குடும்பம் – இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினார். யார் யார் தெரியுமா ?

0
1073
ami
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்டுள்ளரனர். 77 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இத்தயையடுத்து அமிதாப் குடும்பத்தில் உள்ள, அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வெளியான நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

ஆரம்பத்தில் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் மற்றும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் ஒருநாள் தொடரில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்

-விளம்பரம்-
Advertisement