கடந்த சில வருடங்களாக ஐஸ்வர்யா ராய்க்கும் மாமியார் ஜெயாவிற்கும் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. மேலும், குழந்தை பிறந்த பிறகு ரன்வீர் கபூருடன் ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததால் பிரச்சனை இன்னும் பெரிதாகியது.
இந்நிலையில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் சேர்ந்து மும்பையில் ₹22 கோடியில் ஒரு வீட்டை வாங்கியுள்ளனர். இந்த பிரச்சனை காரணமாக தற்போது இந்த புதிய வீட்டிற்கு தனிக்குடித்தனம் போக உள்ளதாக தெரிகிறது.
ஆனால், இது ஒரு முதலீட்டிற்காக மட்டுமே வாங்கப்பட்டது என கூறிவிட்டனர் இருவரும். மேலும் அபிஷேக் பச்சனுக்கு அவரது அம்மா அப்பாவுடன் இருக்கதான் ஆசை. இதற்கு முன்னர் அபிஷேக் பச்சனுக்கு பாலிவுட் நடிகை க்ரிஷ்மா கப்பூருடன் திருமணம் நிச்சியக்கபட்டது. ஆனால், திருமணம் செய்துகொண்டு தனி குட்டித்தனம் போய் விடலாம் என கரிஷமா கூறியதால் அந்த கல்யாணத்தையே வேண்டாம் எனக் கூறியவர் அபிஷேக். இதனால் இருவரும் தனிக்குடித்தனம் போகமாட்டார்கள் என ஆணித்தனமாக தெரிகிறது.




