உலக அழகி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நடிகை “ஐஸ்வர்யா ராய்” மட்டும் தான். 1997 இல் மணிரத்னம் இயங்கி “இருவர்” படத்தில் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக நிலைத்து வருகிறார்.
1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய்.தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார். பல்வேறு பாலிவுட் நடிகர்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிய இவர் பின்னர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் தேவதையும் பிறந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு பதுமையாகவே வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார்.
ஆனால், கடந்த சில காலமாக ஐஸ்வர்யா ராய்யை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கடற்கரையில் நடைப்பயிற்சி செல்வது போல ஒரு புகைப்படம் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராய் வயற்று பகுதி கர்ப்பமாக இருப்பது போல இருக்கிறார்.