தற்போது கோடியில் புரளும் ஐஸ்வர்யா ராஜ், மாடலிங்கில் இருந்த போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
711
- Advertisement -

ஐஸ்வர்யா ராய் மாடலிங் செய்தபோது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இடம் பிடித்தவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரு காலத்தில் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர்.

-விளம்பரம்-

இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய் குடும்பம்:

பின் இவர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வந்தார். ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பட்சன் தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றனர். மேலும், ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். அதோடு உலக அழகிகள் எவ்வளவு வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இந்த தலைமுறை ரசிகர்கள் கூட இவரது இந்த ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று ஆணித்தனமாக கூற முடியும் .

பொன்னியின் செல்வன் படம்:

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ பல வருடங்களாக உருவாகி வருகிறது. சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி இருக்கிறார் மணிரத்தனம்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம்:

இந்த படத்தில் நந்தி தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மாடலிங் செய்தபோது வாங்கிய சம்பளம், பில், போட்டோ சூட்டின் புகைப்படமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலக அளவில் பிரபலமான ஐஸ்வர்யா ராய் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் தான் செய்திருந்தார். 18 வயதில் பத்திரிகை போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த சூட்டிற்கு ஐஸ்வர்யா ராய் 1500 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்:

அந்த சம்பள பில், புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், தற்போது இவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தால் கூட பல கோடி ரூபாயில் சம்பளம் வாங்குகிறார். ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை எடுத்த நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைபடங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் நம்ம ஐஸ்வர்யாராயா! என்று கேட்டு புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement