அடகு கடைக்கு சென்ற ஐஸ்வர்யாவின் நகைகள், 4 ஆண்டுகளாக திருடி சோழிங்கநல்லூரில் இத்தனை லட்சத்தில் வீடே கட்டி இருக்கும் பணிப்பெண்.

0
768
- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய நபர்களை போலீஸ் கைது செய்து இருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டு காலமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய 3, வை ராஜா வை போன்ற படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர் தனுஷை பிரிந்து தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, சென்னையில் போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். இவரின் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது.

- Advertisement -

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதில், 2019 ஆம் ஆண்டு தன்னுடைய தங்கை சௌந்தர்யா திருமணத்தில் நகையை போட்டிருந்தேன். அதற்கு பிறகு தனி லாக்கரில் அந்த நகைகளை வைத்தேன். அதை நான் திறந்து கூட பார்க்கவில்லை. ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலை, சிஐடி நகர், போயஸ் கார்டன் என மூன்று வீடுகளில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 3 கோடி ரூபாய் நகைகள் திருட்டுப் போய் இருக்கிறது.

வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் தான் இந்த வேலையை செய்திருக்கலாம் என்றும் புகாரில் ஐஸ்வர்யா குறிப்பிட்டு இருக்கிறார். இதனை அடுத்து போலீஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர் . அந்த வகையில் போயாஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் நகைகளை வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா. மேலும், நகைகளை வைத்த லாக்கர் சாவி வைக்கப்பட்டிருக்கும் இடம் தனது பணியாளர்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் அடிக்கடி வீட்டிற்கு செல்வார்கள் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி,லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது போலீசார் விசாரணை செய்தனர்.

-விளம்பரம்-

ஈஸ்வரி கொடுத்த வாக்குமூலம்:

அப்போது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி இருந்த ஈஸ்வரி என்பவர் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் போலீஸ் மந்தவெளி பகுதியில் இருந்த ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் அங்கமுத்து இருவரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறது. விசாரணையில் அவர்கள் கூறியிருந்தது, ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்களுடன் நான் வேலை பார்த்து வந்தேன். நகை இருக்கும் லாக்கரின் சாவியை ஐஸ்வர்யா எங்கு வைப்பார் என்பது எனக்கு தெரியும். முதலில் கொஞ்சம் நகைகளை தான் லாக்கரில் இருந்து திருடினேன். இதை ஐஸ்வர்யா வீட்டில் யாருமே கவனிக்கவில்லை. இதனை தொடர்ந்து கார் ஓட்டுனர் வெங்கடேசன் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக லாக்கரிலிருந்து நகைகளை எல்லாம் திருடினேன்.

கைதான திருடர்கள்:

இது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தது. இதற்கிடையில் வங்கியில் கடன் வாங்கி சோளிங்கநல்லூரில் 95 லட்சத்துக்கு வீடு வாங்கினேன். அந்த கடனை இரண்டு ஆண்டுகளிலேயே அடைத்து விட்டேன். பின் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் வேலையை விட்டு நின்று விட்டேன் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து போலீசார் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோரிடம் இருந்து சுமார் 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு பத்திரத்தை பறிமுதல் செய்து இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement