கந்து வட்டிக் கொடுமை தமிழகத்தில் தலைவிரித்து ஆடி வருகிறது. கடந்த சில வாரங்களுக்குமுன்னர் நெல்லையில் கலெக்டர் அலுவலகம் முன்னர் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொளை செய்து கொண்டது.
சாமான்ய மக்களை ஆட்டிப்படைத்த இந்த கந்து வட்டி அதனையும் தாண்டி திரையுலக பிரபலங்களையும் அதன் கொடூரத்திற்கு இறையாக்கி வருகிறது. இன்று காலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார் தற்கொலை செய்து மரணமடைந்தார்.
இதற்கு காரணம் அன்புச் செழியன் என்ற ஒரு சினிமா பைனான்சியர்களுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவர் தான். மேலும், தற்போது தலைமறைவாகியுள்ள இந்த அன்புச் செழியனை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
இதே அன்புச் செழியன் தான், நான் கடவுள் பட விவகாரத்தில் அஜித் குமாரை மிரடினார என் இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். இதனைக் அஜித்தே மறுக்க மாட்டார் எனவும், இவரால் லிங்குசாமி உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.