சோகத்தில் முடிந்த துணிவு பட கொண்டாட்டம் – 19 வயது அஜித் ரசிகர் மரணம். என்ன செய்துள்ளார் பாருங்க.

0
744
ajithfan
- Advertisement -

சென்னயில் நடிகர் அஜித் நடித்த “துணிவு” படத்தை பார்க்க சென்ற அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் என்ற தகவல் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. போனி கபூர் தயாரித்து, வலிமை, சதுரங்காக வேட்டை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, யோகி பாபு, பிக் பாஸ் பாவனி அமீர் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் “துணிவு” படம் `இன்று தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் நடித்த “வாரிசு” பாடத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

அஜித் நடித்திருந்த “துணிவு” படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே `வாரிசா? துணிவா? என்ற பிரச்னைதான் தமிழ் நாட்டில் இருந்து வந்தது. அதோடு “துணிவு” மற்றும் “வாரிசு” என இரண்டு படங்களின் நடிகர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்பதினால் திரையரங்குகள் யாருக்கு கொடுப்பது? என்ற குழப்பமும் இருந்து வந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவுக்கு சமமான திரையங்குகள் கொடுக்கப்பட்டன.

- Advertisement -

7.35 லட்சத்தில் பூ மாலை :

துணிவு மற்றும் வாரிசு படம் இன்று வெளியாகும் என தெரிவித்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்ணனிருந்தே இரு நடிகர்களுடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அதோடு கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, மாலை போடுவது என இருந்து வந்தது. குறிப்பாக பெங்களூருவில் ரசிகர் ஒருவர் 7.35 லட்சம் செலவு செய்து அஜித்தின் மிகப்பெரிய கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து அழகுபார்த்தார்.

அதிக விலைக்கு டிக்கெட்டுகள் :

மேலும் தீவிர அஜித் ரசிகர்கள் எப்படியாவது “துணிவு” படத்தை முதலில் பார்த்து விட வேண்டும் என்ற ரசிகரின் ஆர்வத்தை பயன்படுத்திக்கொண்டு வெளிச்சந்தைகளில் 2 ஆயிரம், 3ஆயிரம் என டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இப்படிபட்ட நிலையில் தான் இன்று அதிகாலை 1 மணிக்கு “துணிவு” திரைப்படம் வெளியானது, அதோடு “வாரிசு” திரைப்படம் காலை 4 மணிக்கு வெளியாகியது. இதனால் நேற்று இரவு திரையரங்கங்கள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

-விளம்பரம்-

ரோகினி திரையரங்கம் :

இந்த நிலையில் அஜித் படம் காலாம் காலமாக வெளியாகி வரும் ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி அங்குள்ள அஜித் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன, இதனால் அங்கு போலீசார் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பதர்டடமான சூழ்நிலை நிலவியது. இப்படி இந்த நிகழ்வு முடியும் முன்னரே சென்னை சித்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்பவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியது.

ரசிகர் மரணம் :

அதாவது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்ற கண்டைனர் லாரி மீது ரசிகர் பரத்குமார் ஆடியபடி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரணத்தில்தான் அஜித் பல காலமாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அதோடு அஜித் ரசிகர் மாற்றத்தை களைத்து கூட இந்த காரணத்திற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரசிகர் உயிரிழந்ததை அடுத்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement