புத்தர் சிலைக்கு முன் தடை செய்யப்பட்ட சிகிரெட்டை பிடித்தாரா அஜித் ? – சர்ச்சைகளுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி.

0
676
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிகர் மட்டும் அல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மிகவும் ஆர்வமிக்க ஒரு ரேசர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான் அதிலும் காரைவிட இவருக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பைக்கில் பல்வேறு நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் உடைய எதாவது ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதை தொடர்ந்து லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கும் பைக் சாகச பயணங்களை மேற்கொண்டுவந்தார் அஜித்.

- Advertisement -

மேலும், அந்த பயணத்தின் போது இவருடன் ஏகே 61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் பைக் ரைடு செய்திருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள புத்தர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், தற்போது பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதே போல அஜித் லடாக்கில் பைக் பயணம் செய்து வருகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் அங்கு பைக் பயணம் செய்த பல அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கி வருகின்றனர்.

மேலும், ஒரு சில ரசிகர்கள் அஜித்தை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய தாய்லாந்து ட்ரிப்பை முடித்துவிட்டு மீண்டும் துணிவு பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில்தான் தற்போது ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் தாய்லாந்தில் மீண்டும் தன் பைக் ட்ரிப்பை தொடங்கியுள்ளார் அஜித்குமார். அதுதொடர்பாக லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஒரு புத்தர் சிலைக்கு முன் நின்று அஜித் தனது வாயில் எதோ பைப் ஒன்றை வைத்து இருக்கிறார். இதை கண்ட நெட்டிசன்கள் பலர் அது E சிகிரெட் என்றும் அந்த சிகிரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

இதற்கு அஜித் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது அது e -சிகிரெட்டாகவே இருந்தாலும் அவர் அதனை தாய்லாந்தில் தானே பயன்படுத்தி இருக்கிறார் இந்தியாவில் இல்லையே என்று கூறி வருகின்றனர். ஒரு சிலரோ அது e சிகிரெட் எல்லாம் கிடையாது அது ரைடர் பொதுவாக குடிக்கும் தண்ணீர் பைப் தான். அதனால் விவரம் தெரியாமல் பேச வேண்டாம் என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement