”அத தவறான கருத்து” – தன்னை பற்றி ஜெயலலிதாவின் உதவியாளர் சொன்ன கருத்துக்கு அஜித் வெளியிட்ட விளக்கம்.

0
501
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த இதையும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் தான் வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
valimai

இப்படி ஒரு நிலையில் ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஜெயராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அஜித் குறித்தும், ‘வலிமை’ ரிலீஸ் குறித்தும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில், காலை நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே நான் எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா? என்று கேட்டேன். ஆமாம் அண்ணா, அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் வெளிவருகிறதல்லவா! என்று உற்சாகத்துடன் சொன்னார்.

- Advertisement -

பூங்குன்றன் ஜெயராமன் கூறியது:

வலிமை திரைப்படம் புரட்சித்தலைவியின் பிறந்தநாளான 24ஆம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தார். வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் கொண்ட பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருந்தது. இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார். புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

வலிமை படம் பற்றி கூறியது:

அம்மாவின் தொண்டர்களை ஆக விரும்புகிறாரா? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமி அன்றுபடம் வெளிவருவது ஆச்சரியம் தானே. அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு வந்த பிறகே விடை கிடைக்கும்.

-விளம்பரம்-

அஜித் அரசியலுக்கு வருவார்:

தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்த அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்கிற இவரின் கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் அரசியலில் குதிக்க போகிறார் என்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் ,அஜீத் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என்று உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது,

அஜித் அரசியல் வருவது குறித்த பதிவு:

அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனவே இது போன்ற தவறான தகவல்களை சோசியல் மீடியாவில் ஊக்குவிப்பதை தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் நடிகர் அஜித் அரசியலில் களம் இறங்கும் எண்ணம் துளி அளவு கூட இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இனிமேலாவது அஜித் அரசியலுக்கு வருவார் என்று கூறும் தகவல்களை எல்லாம் தயவு நிறுத்துங்கள் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

Advertisement