இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது.
நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் VFX காட்சிகள் அற்புதம். அதோடு ஆக்ஷன் கட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr-ன் நடனத்தை பார்த்து ஆடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இந்த படம் 400 கோடி தயாரிப்பில் உருவானது.
ராஜமௌலி மீது அதிருப்தியா :
ஆனால், 500 கோடிக்கு மேல் அதிகமான வசூலை ஈட்டி உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. அதே வேளையில் படத்தில் கதாநாயகியாக நடித்த ஆலியா பட் அவர்கள் RRR படத்தின் இயக்குனர் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதற்கு முக்கிய காரணமே ஆல்யா பட்டின் செயல் தான் என்று சொல்ல வேண்டும்.
RRR பதிவுகளை நீக்கிய ஆல்யா :
RRR படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய கதாபாத்திரம் இல்லை. படத்தில் மொத்தமே 7 சீன்கள் அளவுக்கு தான் அவர் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் மட்டுமே பெரிய டயலாக் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் அலியா பட் RRR படக்குழுவினரின் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கோபத்தில் அலியா பட் தன்னுடைய இன்ஸ்டாவில் இருந்து RRR படம் பற்றிய பதிவுகளை நீக்கி இருக்கிறார்.
ஆல்யா விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள ஆல்யா பட் “ RRR படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அத்திரைப்படம் குறித்தான பதிவுகளை நீக்கிவிட்டேன் என்று பரவி வரும் செய்தியை நான் அறிந்தேன். உண்மையை அறியாமல் ஏதோவொரு அனுமானத்தில் இதுபோன்ற செய்திகள் செய்திகளை பரப்பவேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். என் இன்ஸ்டா பக்கம் அதிக பதிவுகளை கொண்டிருப்பதால் பழைய வீடியோ பதிவுகளை நான் மாற்றி அமைப்பது எப்போதுமான வழக்கம்.
அதீத உழைப்பினால் உருவான திரைப்படம்
ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் மிகவும் நன்றி கடன் பட்டுளேன். மேலும் சரண் , தரக் ஆகியோருடன் நடித்ததற்காகவும் நன்றி கூறுகிறேன். ராஜமௌலி மற்றும் அவரது குழுவினரின் அதீத உழைப்பினால் உருவான திரைப்படம் RRR. எனவே அது குறித்து எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு’ என்று விளக்கம் கொடுத்துள்ளார் ஆல்யா பட்.
‘