பிரபல நடிகை வீட்டின் நீச்சல் குளத்தில் புகுந்த பாம்பு – வைரலாகும் வீடியோ.

0
1036
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சோனி ரஸ்தான். இவர் இயக்குநர் மகேஷ் பட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் தான் நடிகை ஆலியா பட். தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஆலியா பட் கலக்கி கொண்டு இருக்கிறார். ஹைவே, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் இவர் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். இந்நிலையில் இயக்குநர் மகேஷ் பட்டின் மனைவியும், முன்னாள் நடிகையுமான சோனி ரஸ்தான் வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று வந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

இயக்குநர் மகேஷ் பட்டின் வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று இறங்குவதை பார்த்து உள்ளார் நடிகை சோனி ரஸ்தான். அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தண்ணீர் குடிக்க வீட்டுக்கு புது விருந்தாளி வந்துருக்காங்க. முதலில் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு சென்று விடும் என நினைத்தேன்.

- Advertisement -

ஆனால், நீச்சல் குளத்தில் முழுவதுமாக இறங்கி செம குளியல் போட்டு புதருக்குள் சென்று விட்டது என பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறது. நீச்சல் குளத்தில் சுற்றி விளையாடும் பாம்பின் வீடியோவை பார்த்த ரசிகர்களை ஷாக் ஆகி கமன்ட் அடித்து வருகின்றனர். மேலும், மகேஷ் பட் இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள சதாக் 2 படம் வரும் ஜூலை 10ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷங்களும், பாலிவுட்டில் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு மகேஷ் பட் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என பலவிதமான வதந்திகள் பாலிவுட்டில் பரவி வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement