இது மிகவும் கண்டிக்கதக்கது- ஜோதிகா தஞ்சை கோவில் விவாகரத்தில் மாதர் சங்கம் வெளியிட்ட நீண்ட அறிக்கை.

0
6669
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா அஜித் விக்ரம் சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சிலும் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பி வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. தற்போது ஜோதிகாவின் கருத்திற்கு ஆதரவாக அனைத்திந்திய மாதர் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விருது வழங்கும் விழாவில் திரைக் கலைஞர் ஜோதிகாவிற்கு அவர் நடித்த ராட்சசி படத்திற்கு 2019 க்கு சிறந்த பெண்நடிகர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்டு பேசிய திரை கலைஞர் ஜோதிகா தஞ்சையில் ஒரு படப்பிடிப்புக்கு சென்ற போது தான் பார்த்த சில விஷயங்களை பதிவு செய்துள்ளார். பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக உள்ளது.. உதய்பூர் பேலஸ் போல உள்ளது. படப்பிடிப்புக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்குச் சென்ற போது அது அடிப்படை வசதியற்று, பராமரிப்பற்று இருந்தது என்றும் நாம் கோவில்களை பராமரிக்க அதிகம் செலவு செய்கிறோம் பெயின்ட் பண்ணுகிறோம், கோவில் உண்டியல்களில் பணம் போடுகிறோம் அதே போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள் என்ற வேண்டு கோளை வைத்தார். தன் கருத்தை சொல்வதற்கு ஜோதிகாவற்கு உரிமை உண்டு.

- Advertisement -


ஜோதிகாவில் இக்கருத்தை ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இன்று அரசுபள்ளிகள் போதுமான கட்டமைப்பு வசதிகளற்றுக்கிடக்கின்றன. பல பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன். மேலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமலும் ஏழை எளிய மக்கள் தவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/aidwatn/

அவர் பேசிய இந்த வீடியோவை ஒவ்வொருவரும் தனக்கு சாதகமாக சில பகுதியை மட்டும் எடுத்து பதிவிட்டு இந்து கோவிலை ஜோதிகா இழிவு படுத்திவிட்டதாகவும் ஜோதிகா இந்து கோவிகளுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாக பொய்யான தகவலை முகநூலில் பரப்பி வருகின்றனர். மேலும் அவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து தமிழகத்திற்கு பிழைப்புக்கு வந்தவர் என்றும், இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர் என்றும் முகநூலில் பதிவிட்டு மிகவும் இழிவான அரசியலை சங்கிகள் நடத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஒரு பெண் என்பதாலேயே ஆபாசமான சொற்களையும், பாலியல் நிந்தனைச்சொற்களை பயண்படுத்தி விமர்சித்து வருகின்றனர். சிலர் ஜோதிகாவிற்கு அஞ்சலி செலுத்தி போஸ்டர் போட்டுள்ளனர். சங்கிகளின் இத்தகைய செயல் அநாகரீகமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்தியா முழுவதிலும் கொரனா பாதிப்பால் மக்கள் அல்லல் பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேலையில், அரசு மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கண்டு கொள்ளாமல் கைதட்டச்சொல்லியும், வீட்டில் விலக்கேற்றச் சொல்லியும் மக்களை திசை திருப்பி வருவதைப்போலவே சங்கிகளும் எப்போதோ ஜோதிகா பேசிய வீடீயோவை தேடி எடுத்து இது போன்ற மலிவான அரசியல் நடத்திவருவது மக்களின் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமின்றி வேறென்னவாக இருக்க முடியும்.

Image may contain: 3 people, text that says "ஜோதிகாவுக்கு எதிரான மலிவான பிரச்சாரம்; சங்பரிவாரத்தினருக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்! இந்திய மக்கள் கொரோனா பாதிப்பால் அல்லல்பட்டு போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கண்டு கொள்ளாமல் ள்ளாமல் கைதட்டச் சொல்லியும், வீட்டில் விலக்கேற்றச் சொல்லியும் மக்களை திசை திருப்பி வருவதைப் போலவே, சங்பரிவாரத்தினர் எப்போதோ ஜோதிகா பேசிய வீடீயோவை தேடி எடுத்து இதுபோன்ற மலிவான பிரச்சாரத்தை நடத்தி வருவது மக்களின் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமின்றி வேறென்ன பெண் என்பதாலேயே ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது."

2013ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் கோவில்கள் அதிகம் உள்ளன. எனவே இனிமேல் கோவில்களை அல்ல கழிவறைகளை கட்டுங்கள் என்று சொன்னார். ஜோதிகாவின் அதே வார்த்தையைத் தான் அன்று மோடி பேசி இருக்கின்றார். இருவர் பேசியிருப்பதும் ஒரே கருத்துதான். இங்கு என்ன விஷயம் பேசினார்கள் என்பது முக்கியமல்ல. யார் பேசினார்கள் என்பதே சங்கிகளுக்கு முக்கியம். அன்று மோடியை கொண்டாடிய சங்கிகள் இன்று ஜோதிகாவை இழிவு படுத்துகின்றனர் இதிலிருந்தே இவர்கள் உண்மையிலேயே இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் அக்கறை உள்ளவர்களா என தெரிந்து கொள்ள முடியும்.

ஜோதிகாவுக்கு எதிரான மலிவான பிரச்சாரம்; சங்பரிவாரத்தினருக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்!இந்திய மக்கள் கொரோனா…

Cpim ThousandLight ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಏಪ್ರಿಲ್ 25, 2020

இதே கருத்தை ஆண் பேசயிருந்தால் ஆண்டி இந்தியன் என்றிருப்பார்கள் பெண்ணாக இருப்பதால் பாலியல் நிந்தனைச் சொற்களாலும், நடத்தை குறித்தும் இழிவான வார்த்தைகளால் பேசியும், முகநூலில் பதிவிட்டும் வருகின்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜோதிகாவின் கருத்து சுதந்திரம் பறிபோவதை ஒரு போதும் அனுமதிக்காது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் என்னறன்றும் களத்தில் நிற்கும். ஜோதிகாவை இழிவாக முகநூலில் பதிவிட்ட சங்கிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக காவல்துறையை ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

Advertisement