‘எனக்காக வேண்டிக்கோங்க’ ஹாஸ்பிடலில் இருந்து ஆல்யா மானஸா மானஸா வெளியிட்ட புகைப்படம். என்ன ஆச்சி ?

0
520
alya
- Advertisement -

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா தனக்கு விபத்து ஏற்பாட்டுக்கு விட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா

- Advertisement -

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இரண்டாவது குழந்தை :

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் கதாநாயகியாக ஆல்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பாப்பு இருந்த நிலையில் தான் தனக்கு அடிப்பட்டு இருப்பதாகவும் தன்னுடைய காலில் பெரிய கட்டு போட்டிருப்பதாகவும் ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

காலில் எலும்பு முறிவு :

அந்த வீடியோ பதிவில் நான் இதுவரையில் எதிர்பார்க்காத ஓன்று என்னுடைய வாழ்வில் நடந்து விட்டது. என்னுடைய கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் நான் நலமுடன் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனையில் இருந்த படி சோகத்துடன் அந்த பதிவில் கூறியிருக்கிறார் நடிகை ஆலியா. சமீபத்தில்தான் டான்ஸ் மாஸ்டருடன் சரியான ஆட்டம் போட்ட ஆலியா தற்போது இவரின் நிலையில் பார்த்து பரிதாபப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆறுதல் கூறும் ரசிகர்கள் :

சமீபத்தில் தான் குழந்தை பிறந்தவுடன் உடல் எடை கூடியதை அடுத்து கடினப்பட்டு அதனை குறைத்து பழைய நிலைக்கு திரும்பினார். மேலும் இவர் மீண்டும் சீரியலில் அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் ஆலியா வெளியிட்ட இந்த விடீயோவினால் ரசிகர்கள் தங்களுடைய ஆறுதலை நடிகை ஆலியாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement