இந்நிலையில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார் செண்பா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது வேறு யாரும் இல்லை நம்ம பிக் பாஸ் ஜூலி தான். இந்த நிகழ்ச்சியின் மேடைக்கு செண்பா வந்தவுடன் அவரது ரசிகர்கள் அவரை பார்த்து பரவசம் அடைந்து கூக்குரல் இட்டனர்.
இதனை கட்டுப்படுத்த நினைத்த ஜூலி அமைதியாக இருங்கள் என கூறினார். ஆனால், ரசிகர்கள் அதனை காதில் கூட வாங்கவில்லை. கத்திக்கொண்டர் இருந்தனர்
பின்னர் மைக்கினை ஜூலியிடம் இருந்து வாங்கிய செண்பா தனது ரசிகர்களை அமைதியாக இருக்க சொன்னதும் அனைவரும் அமைதியாகிவிட்டனர். இதனை செண்பாவின் பின்னால் இருந்து பார்த்த ஜூலி சற்று தலையை குனிந்து கொண்டார். அதன் பின்னர் ஜூலிக்கு பதிலாகி செண்பா அந்த மேடையில் பேச ஆரம்பித்தார்.
என்னதான் ஜூலி இரண்டு படங்களில் நடித்து, தற்போது ஹீரோயினாக நடித்தாலும், ஒரு படத்தில் கூட நடிக்காத சீரியல் நடிகை செம்பாவிற்கு தான் மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதை இந்த சம்பவம் நமக்கு நிரூபிக்கிறது.




