சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் மிக பிரபலமானது ராஜா ராணி சீரியல். இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானஷா. இவரது சீரியல் கேரக்டர் செண்பா மிகவும் பிரபலமான ஒரு கேரக்டராகும். இதனால் ஆல்யாவிற்கு தமிழ் ரசிகர் பட்டாளம் அதிகம்.
அந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் இவர் அடிக்கடி டப்ஸ்மாஷ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடுவார் அதனை பார்க்கவே ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தொடர்ந்து பல காலம் சின்னத்திரையில் நடித்து வரும் இவர் எப்போது பெரிய திரைக்கு வர போகிறார் என ஒரு பேட்டி கொடுத்தார்.
அதில் தன் வாழ்க்கையில் நடந்த சில அதிர்ச்சியான சம்பவங்களை பற்றியும் கூறினார்.
ஆல்யா தனது லீவ் நாட்களை கொண்டாட ஜப்பான் சென்றுள்ளனர். அங்கு அவரும் அவரது சீன தோழியும் சேர்ந்து ஒரு சைக்கிளில் ரோட்டில் டபில்ஸ் சென்றுள்ளனர். இதனை பார்த்த போலீஸ் அவர்களை பிடித்துள்ளது. இங்கு சைக்கிளில் இருவர் பயணம் செய்வது குற்றம் எனக் கூறி அவர்களை தண்டிக்க பார்த்துள்ளனர். ஆனால், நாங்கள் தெரியாமல் செய்துவிட்டோம் என கெஞ்சி இருவரும் தப்பித்துள்ளனர். இந்த சுவாரஸ்யமான செய்தியை கூறி சிரித்தார் ஆல்யா.