நடிகை அமலாபால் தன் காதல் கணவர் ஏ.எல் விஜயிடம் விவாகரத்து பெற்றதில் இருந்து சர்ச்சைகளில் சிக்கி திண்டாடி வருகிறார். சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கடந்த ஒரு வருடமாக அவர் மீது கேஸ் நடந்து வருகிறது.
இந்நிலையில் பாண்டிசேரியில் வாங்கிய அதே சொகுசு காரில் பாண்டிசேரியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு தனது கண்களை தானமாக வழங்கி உள்ளார். அமலா பால் சொகுசு காரில் வந்ததை பார்த்த விழாகுழுவினர் ஆச்சரியம் அடைந்தனர்.
கண் தானத்தில் கையெழுத்து போட்ட பிறகு பேட்டி கொடுத்த அமலா பால் இந்தியாவில் பார்வையற்றோர் மிக அதிகமாக இருப்பதால் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொகுசு கார் வழக்கு உச்சத்தை எட்டி அமலா பால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நிபந்த்னை ஜாமினில் வெளியே வந்தார் அமலா பால்.