குளியல் டவலில் அமலா பால் கொடுத்த போஸ். செம போதையா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
15763
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார். அதே போல் இவர் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதையும் பாருங்க : யாருக்காகவும் அந்த வேலையை விட மாட்டேன். ஜோதிட பலன் தொகுப்பாளினி என்ன வேலை செய்கிறார் தெரியுமா ?

ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார். அதிலும் அவர் இணையங்களில் வெளியிட்டு வரும் புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நடிகை அமலாபால் அவர்கள் சோசியல் மீடியாவில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவர் பற்றி கூறுவதாகவும் கூறி இருந்தார். அதோடு தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து கூடிய விரைவிலேயே அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை அமலா பால் அவர்கள் நைட் டிரெஸில் செம கூலாக போஸ் கொடுத்திருக்கிறார். தூங்கி எழுந்தவுடன் தலை வாராமல் கண்ணைத் திறக்காமல் கூட அமலா பால் போட்டோ எடுத்திருக்கிறார். தற்போது அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் என்ன மேடம் செம போதை போல் இருக்கு என்று பல்வேறு விதமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement