ராம் சரண் – உபாசனா குழந்தைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசை கொடுத்த முகேஷ் அம்பானி- என்ன தெரியுமா?

0
2146
- Advertisement -

ராம்சரண் மற்றும் உபாசனாவின் குழந்தைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசை முகேஷ் அம்பானி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. கடந்த ஆண்டு நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ராம் சரண் திரைப்பயணம்:

இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் ராம் சரண் போலீசாக மிரட்டியிருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘game Changer’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.

ராம் சரண் குடும்பம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட்டிலும் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதோடு இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள்.

-விளம்பரம்-

ராம்சரண்-உபாசனா குழந்தை பெயர்:

பின் கடந்த ஆண்டு தான் ராம் சரண் தந்தையாகும் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. மேலும், கடந்த மாதம் இறுதியில் தான் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் இவர்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழா நடந்தது. இதை உபசமாவின் தாய் வீட்டிலேயே நடத்தி இருந்தார்கள். இந்த விழாவில் ராம்சரண்-உபாசனாவின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்கள் தங்களுடைய மகளுக்கு க்ளின் காரா கொனிடேலா (Klin Kaara Konidela) என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முகேஷ் அம்பானி கொடுத்த பரிசு:

இந்த பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமம் ஆகும். இதில் ‘க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும் மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் ஆற்றல்’ என்று அர்த்தம். இந்த நிலையில் ராம்சரண்- உபசனா தம்பதியின் குழந்தைக்கு முகேஷ் அம்பானி அளித்து இருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத் தொட்டிலை பரிசாக ராம்சரண்- உபசனாவின் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த சிறிய தங்கத் தொட்டிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisement