‘லிங்குசாமி சார் இப்படி பண்ணுவாருனு நினைக்கல’ அம்பானி சங்கர் அளித்த பேட்டி.

0
535
- Advertisement -

முதன்முதலாக அஜித்துடன் நடித்த சினிமா வாய்ப்பு குறித்து நடிகர் அம்பாசமுனி சங்கர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் அம்பானி சங்கர். “கடுகு சிறித்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகர் அம்பானி சங்கர் தன் வாழ்க்கையில் முன்னேறியவர். சினிமா உலகில் உயரம் ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாக உள்ளவர். தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் ,விடாமுயற்சியாலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் சங்கர்.

-விளம்பரம்-

நடிகர் அஜித்தின் ‘ஜீ’ படத்தின் மூலம் தான் அம்பானி சங்கர் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் கருணாஸ் மற்றும் சங்கர் இணைந்து நடித்த படம் “அம்பாசமுத்திரம் அம்பானி”. இந்த படத்தின் மூலம் சினிமா உலகில் இவருக்கு என்ற ஒரு அடையாளத்தை உருவாகி தந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் அம்பானி சங்கர் என்று அழைத்தார்கள். இதை தொடர்ந்து அம்பானி சங்கர் அவர்கள் சிம்புவின் வல்லவன், கருப்பசாமி குத்தகைகாரர், குசேலன் பட்டதாரி, கண்னே கலைமானே, பக்கா, குளேபாகுபாலி, விருந்தாளி, பட்டது யானை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் இதுவரை 35 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் அம்பானி சங்கர் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடந்தது. இவர்கள் திருமணத்திற்கு வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, பெரிய கருப்பு தேவர், சிங்கமுத்து, போண்டாமணி உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் வந்து வாழ்த்தினார்கள். அதோடு இவர் அடிக்கடி என்னுடைய ரோல் மாடல் நடிகர் வடிவேலு தான் என்று கூறுவார்.

அது மட்டும் இல்லாமல் அவரைப் போல சிறந்த காமெடியனாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும். இது தான் இவருடைய லட்சியம் என்றும் கூறி இருக்கிறார். இவர் நடிப்புக்கு சமமாக விளையாட்டிலும் அதிக ஈடுபாடு உள்ளவர். இவர் ஒரு சிறந்த பாட்மிண்டன் விளையாட்டு வீரர். இவர் ஒரு முறை நடந்த பாரா பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்கம் வென்று இருக்கிறார். மேலும், இவர் திரைப்படம் மட்டுமில்லாமல் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
ambani

இந்த நிலையில் சமீபத்தில் இணையதளம் ஒன்றிற்கு அம்பானி சங்கர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் ஆபீஸ் பாயாக தான் என்னுடைய கேரியரை ஆரம்பித்தேன். நான் சிறு வயதில் இருந்தே தல உடைய ரசிகன். அவருடைய எல்லா படங்களையும் வெறித்தனமாக பார்ப்பேன். குறிப்பாக, தீனா படத்தை நான் பலமுறை பார்த்திருந்தேன். அஜித் சார் உடைய ரசிகனாக இருந்த எனக்கு முதல் படமே அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது நான் செய்த பாக்கியம். இதெல்லாம் தற்செயலாக தான் நடந்தது. எல்லாம் கடவுளுடைய செயல்தான். நான் பாக்யராஜ் சாரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரை பார்ப்பதற்காக லிங்குசாமி சார் வந்தார். அப்போதுதான் பாக்யராஜ் சார் உதவியாளர் என்னை லிங்குசாமி சாரிடம் அறிமுகம் செய்து வைத்து, இவன் நடிக்கத்தான் வந்திருக்கான். ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று அவர் தான் என்னை லிங்குசாமி சாரிடம் அறிமுகம் செய்தார். லிங்குசாமி சார் என்னை பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே கூறவில்லை. நான் சாரிடம் சொல்லிட்டு போகிறேன் என்று கூறிவிட்டு பாக்யராஜ் சாரை சந்திக்க போய்விட்டார். அதற்கு பிறகு சிறிது நேரம் கழித்து பாக்யராஜ் சாரை பார்க்கப் போனேன்.

அப்போதுதான் அஜித் நடிக்கும் ஜி படத்தில் உனக்கு ஏதோ ஒரு ரோல் இருக்கு என்று லிங்குசாமி சார் சொல்லியிருக்கிறார் என்று சொன்னார். அதற்கு ஏதோ டெஸ்ட் எடுக்கிறார்களாம், நீ போய் அதை அட்டென்ட் பண்ணு என்று பாக்யராஜ் சார் என்னிடம் தெரிவித்தார். முதல் முறை நடிக்கப் போனதால் என்னை டெஸ்ட் சூட்டிற்கு அழைத்தார்கள். அதில் என்னை ஓகே செய்து விட்டார்கள். முதல் படமே அஜித் சார் படம். அந்த படத்தில் நானும் நடிகனாக அறிமுகமானது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement