பிலக்கா பசங்களா, நீங்க எல்லாம் ஜெர்னலிஸ்ட்டா? இத ஏண்டா நீங்க வெளிய சொல்லால – முதன் முறையாக உண்மைகளை உடைத்த அமீர்.

0
220
- Advertisement -

சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி .இருக்கிறார்கள் அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் கயல் ஆனந்தி நடித்து வரும் மங்கை என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிய வந்திருக்கிறது. அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ், இந்த மூன்று பேருமே சினிமாவில் முதலீடு செய்து செய்துள்ளார்களா? என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்?

இவர்களுடைய சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது? என்ற தீவிர விசாரணைனையில் ஈடுபட்டு இருக்கிறது. அப்போது இயக்குனர் அமீர் அவர்கள் மைதீன் நடிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வருவது தெரிய வந்திருக்கிறது. இதனால் அமீருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அமீர் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார்.

-விளம்பரம்-

அதில் செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். இறைவன் மிகப் பெரியவன்’ என்றும் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமீர், தனுக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் என்ன உறவு, அவர் எப்படி எனக்கு பழக்கமானார் என்பதை கூறி இருக்கிறார். மேலும், தானும் அவரும் பார்ட்னர் என்றும் அவருக்கும் எனக்கும் 50 – 50 பங்கு என்று பலர் கூறி வருகின்றனர் என்று தனது நிறுவனத்தின் ஆதாரத்தை காட்டினார். மேலும், அனைத்தையும் கண்டு பிடித்த புலனாய்வு புலிகள் இதை கண்டுபிடிக்கவில்லையா? நீங்க எல்லாம் ஜெர்னலிஸ்ட்டா என்று கொந்தளித்து பேசி இருக்கிறார் அமீர்.

Advertisement