ரஜினி- விஜய்க்கு அவங்க தேவைப்படுகிறார்கள் ஆனா, எனக்கு – வேதனையில் புலம்பிய அமீர்

0
325
- Advertisement -

ரஜினி- விஜய்க்கு தான் பிற மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள் எனக்கில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அமீர் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். பின் இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். மேலும், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர்.

- Advertisement -

அமீர் திரைப்பயணம்:

இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார்.
மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். தற்போது அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாயவலை.

-விளம்பரம்-

மாயவலை படம்:

இந்த படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். வின்சென்ட் அசோகன், சஞ்சனா ஷெட்டி, சரண், தீனா, சத்யா உட்பட பல பேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இசையமைத்து இருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு:

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர், சினிமா அறிவு இருப்பவர்களை ரசிப்பது தான் என்னுடைய வேலை. இந்த படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்களிடம் சென்றோம். ஆனால், யாரும் நடிக்க வரவில்லை. அதனால் தான் நானே நடித்தேன். இது எனக்கே புது அனுபவமாக இருக்கிறது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு நானே வெளியிடுகிறேன் என்று சொன்னார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள்.

அமீரின் சர்ச்சை கருத்து:

ஆனால், எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானும் தேவைப்படுவது புதிதில்லை. நான் கொஞ்சம் கோபக்காரன், சுயபரியாதையுடன் வாழ்பவன். அதனால் தான் நான் சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை என்று பல விஷயங்களை பேசி இருக்கிறார். குறிப்பாக, இவர் ரஜினி- விஜய்யின் படத்திற்கு பிற மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள் என்று சொன்ன வார்த்தை தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement