அஜித்தின் இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.! நெகிழ்ந்த ஸ்ரீரஞ்சனி.!

0
1391
Sriranjini
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தவர் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. கடந்த சில மாதங்களாக இவரை அந்த நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் தற்போது கருவுற்று இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம் 2016-ம் ஆண்டு நடைபெற்றது. 

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரஞ்சனி தாய்மை அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அஜித்துடன் `ஆரம்பம்’ படத்தில் நடித்திருக்கும் அமித் சிறப்பாகப் பாடவும் செய்வார் என்பதால், `விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற `கண்ணான கண்ணே’ பாடலை தினமும் இரவு மனைவி ரஞ்சனி வயிற்றின் அருகே சென்று பாடுகிறாராம்.

கணவர் பாடிய `கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்கிறப்ப வயித்துக்குள்ள அமைதியாகவே இருந்துட்டு இருந்ததா, ஒருநாள் பாட்டை மாத்தி `அடிச்சுத் தூக்கு’ பாடலைப் பாடச் சொன்னேன். சொன்னா நம்ப மாட்டீங்க, அந்தப் பாட்டைக் கேட்ட மறு நிமிஷம், என் வயித்துக்குள் அப்படியொரு உதை விழுந்தது’ எனப் பூரிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

-விளம்பரம்-
Advertisement