ஒரு காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன். இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன்.

ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்துஇருந்தார். ஆனால், இவரை கடந்த 7 ஆண்டுகளாக எந்த தொலைக்காட்சியிலும் கான முடியவில்லை.

Advertisement

7 ஆண்டு காணாமல் போன கண்ணன் :

இப்படி ஒரு நிலையில் இவர் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். கிராமிய கலைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக சிங்கப்பூரில் குடியேறினார். தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், கதைகள் வாயிலாக பிற நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவித்தும் வந்தார்.

இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக வேலை செய்து கொண்டிருந்த போது நா. முத்துசாமி ஐயாவிடம் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு கிராமிய கலைகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளில் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் இடம் பல ஆண்டுகளாகவே நான் கற்றுக் கொண்டு வந்தார்.

Advertisement

கலை மீது கொண்ட ஆர்வம் :

சிங்கப்பூரில் இருந்து வந்து சென்னையில் 10 வருடம் வாழ்ந்திருந்தார் ஆனந்த கண்ணன். பின் 2013 ஆம் ஆண்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்று அவர் கத்துக்கிட்ட கிராமிய கலைகளை “ஆனந்தக் கூத்து” என்ற பயிற்சியின் மூலம் சொல்லிக் கொடுத்தும், அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்தும் வந்தார். 85,000 மாணவர்கள் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

Advertisement

அனிஷா போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார். ஆனால், புற்று இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார். இப்படி ஒரு நிலையில் இன்று அவரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சன் மியூசிக் தொகுப்பாளினி அனிஷா.

Advertisement