Trp காக தான் இப்படி பண்ணுவாங்க – சூப்பர் சிங்கரில் இருந்து விளக்கையதற்கான காரணத்தை சொன்ன அனந்த் வைத்தியநாதன்

0
1777
Ananth Vaidyanathan
- Advertisement -

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான் என்று பாடகர் அனந்த வைத்தியநாதன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசையமைப்பாளர்களை உருவாக்கியும் இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பாடகர்களாக்கியும் இருக்கிறார். ஆனால், சில வருடமாகவே இவர் நிகழ்ச்சியில் காணவில்லை. இடையில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவருடைய குரல் வளம் பாதிக்கப்பட்டது. இதனால் வேகமாக பாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இதனை அடுத்து இவரும் பல சிகிச்சைகள் செய்தும் எந்த பலனும் இல்லை. பின் இதுதான் தன்னுடைய நிலைமை என்று புரிந்து கொண்டு இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன்:

இருந்தாலும், தன்னுடைய பாடல் கலை அழிந்து விடக்கூடாது என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகலாம் என்று பல கனவுகளுடன் நுழைந்த அனந்த் வைத்தியநாதனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் நுழைந்த இவர் 21 நாட்களில் வெளியேற்றப்பட்டார்.

அனந்த் வைத்தியநாதன் குறித்த தகவல்:

அதோடு இவர் பாடகர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சில ஆண்டு என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் பேட்டி ஒன்றிய அளித்து இருக்கிறார். அதில் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து கூறியது, நான் எப்போதுமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும், விஜய் டிவியையும் மறக்கவே முடியாது. எனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஒரு காலத்தில் நான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் என்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பழகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அனந்த் வைத்தியநாதன் அளித்த பேட்டி:

சிலருக்கு திறமை இல்லாமல் இருக்கும்போது கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என்னோடு பழகினால் போதும் என்று நினைத்திருக்கிறார்கள். அதுதான் எனக்கு வேதனை கொடுத்தது. அந்த நேரத்தில் கொரோனா பீரியட் வந்ததால் அப்போது என்னால் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் என்னால் தொடர முடியவில்லை. அதுபோல சிலர் என்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது இரண்டு மூன்று பாடல்கள் தான். ஆனால், எதற்காக வெட்டி கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்? அது வேற ஒன்னும் இல்லைங்க, டிஆர்பிக்காக தான்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து சொன்னது:

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவர்கள் எவ்வளவோ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். எல்லா நிகழ்ச்சியும் டிஆர்பி அடிப்படையில் தான் நடக்கிறது. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்னும் விதிவிலக்கு இல்லை. மக்களுக்கு தகுந்த மாதிரி மக்கள் என்ன மாதிரி விரும்பி பார்க்கிறார்களோ அந்த மாதிரி தான் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போக வேண்டும். இதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் அடிக்கடி செய்து கொண்டிருக்கிறார்கள். நான் பலருக்கு அவர்களுடைய திறமையை மெருகேற்றி இருக்கிறேன். அதற்கு அவர்கள் எனக்கு தொடர்ந்து மரியாதை தர வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. அந்த கலையை அவர்கள் மறந்துவிடக்கூடாது. அதை அழிய விடாமல் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். அதை சிலர் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் பேரும் புகழும் கிடைத்தவுடன் விட்டு விடுகிறார்கள். அது நமக்கு கொஞ்சம் வேதனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement