3000 போட்டோவ பாத்து செலக்ட் பண்ணவங்களும் போய்ட்டாங்க – இப்போ இவங்களும் போய்ட்டாங்க – வெளியேறி காரணம் சொன்ன ரேஷ்மா.

0
6144
reshma
- Advertisement -

அன்புடன் குஷி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த இரண்டாம் நடிகையும் தற்போது அந்த சீரியலில் இருந்து விளகியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்னதம்பி” என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் நடிகர் ப்ரஜின் பிரபலமானவர். தற்போது நீண்ட இடைவேளிக்கு பின்னர் “அன்புடன் குஷி” என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு நடிகர் ப்ரஜின் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். அடுத்ததாக இவர் நடித்து வரும் “அன்புடன் குஷி” சீரியல் காதல் கதை அம்சங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.

-விளம்பரம்-

ப்ரஜின், லோகேஷ் பாஸ்கரன், மீரா கிருஷ்ணா, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சீனு, கவுசல்யா செந்தாமரை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், இந்த சீரியலில் முதலில் பிரஜனுக்கு ஜோடியாக கர்நாடகாவை சேர்ந்த மான்ஷி என்பவர் நடித்து வந்தார். ஆனால், இந்த சீரியல் துவங்கிய ஒரு சில மாதத்திலேயே மான்ஷி இந்த சீரியலை விட்டு விலகிவிட்டார்.

- Advertisement -

பின் அவருக்கு பதிலாக குஷி கதாபாத்திரத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் கமிட் ஆனார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ரேஷ்மா வெங்கடேஷும் சமீபத்தில் விலகி இருந்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரேஷ்மா வெங்கடேஷ், நான் அன்புடன் குஷி தொடரிலிருந்து விலகுகிறேன். இனி என்னை அத்தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது. அந்தக் கதாபாத்திரத்தை நான் மிஸ் செய்கிறேன். அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

This image has an empty alt attribute; its file name is image-11.png

எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்களது ஆதரவு எனக்கு என்றும் தேவை. கவலைப்பட வேண்டாம் நண்பர்களே. விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொன்ன இவர், யாருக்கும் ஒரு வாய்ப்பை விட்டுட்டு போகணும்னு நினைக்க மாட்டாங்க. ஆனால் எனக்கு புதிதாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் நான் சீரியலில் இருந்து வெளியேறினேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, இந்த சீரியலில் முதலில் நாயகியாக நடித்த மான்ஷியை 3000 பெண்களின் புகைப்படங்களை பார்த்து ஆடிஷன் செய்து பின்னர் இந்த சீரியலுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement